லஞ்சமே விபத்துகளுக்கு காரணம்: விஜயகாந்த்
சென்னை: லஞ்சம் வாங்கிக் கொண்டு போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் விபத்துகளுக்கு காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சற்றும் எதிர்பாராத வகையில் திடுக்கிடும் இரண்டு செய்திகள் நம்மை அதிரவைத்துள்ளன.
வே தாரண்யம் அருகில் 25 பள்ளிக் குழந்தைகளோடு 2 ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வேன் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு ஆசிரியையும், 9 குழந்தைகளும்
இறந்துள்ளனர். 11 குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அ துபோல, ஆத்தூருக்கு அருகில் 40 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் மரத்தில் மோதி கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் டிரைவரும், 4 குழந்தைகளும்
கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று தெரிகிறது.
அ ரசு நிர்வாகங்களில் எங்கும் லஞ்சமும், ஊழலும் தாண்டவமாடுவதே இதற்கெல்லாம் காரணம். சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது, லஞ்சம் வாங்கிக் கொண்டு வாகன உரிமம் ஓட்டுநர் உரிமம் வழங்குவது தான் விபத்துகளுக்கு காரணம்.
ஓட் டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது, அதிக வேகம் மற்றும் அளவுக்கு அதிகமாக வேன்களில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றுவது ஆகியவற்றை லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் விடுவதுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.
போக்குவரத்துத் துறையின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு நாம் தரும் விலையே இந்த குழந்தைகளின் மரணங்கள்.
குழந்தைகளை இழந்து துயருறும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.