விளம்பரங்கள்


செய்திகள்:

பண‌ம் கொடு‌ப்பதுதா‌ன் ‌திரும‌ங்கல‌ம் பா‌ர்முலா: விஜ​ய​காந்த்

”வாக்​கா​ளர்​களை ஒரு புறத்​தில் பய​மு​றுத்​து​வ​தும்,​​ மறு​பு​றத்​தில் பணம்,​​ பிரி​யாணி என்று ஆசை காட்​டு​வ​தும்தா‌ன் திரு​மங்​க​லம் பார்முலா” எ‌ன்று தே.மு.தி.க.​ தலை​வர் விஜ​ய​காந்த் கூறி​யுள்​ளார்.​
விரிவு…

என் தைரியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது – விஜயகாந்த்

வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் இரண்டு நாட்களாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சாலவேடு கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், கீழ்கொங்காலூர், மருதாடு, வந்தவாசி, இளங்காடு, நடுகுப்பம், நல்லூர், மாவலவாடி, தெய்யார், தெள்ளார் ஆகிய கிராமங்களில் வேனில் நின்றபடியே தே.மு.தி.க.வேட்பாளர் ஜனார்த்தனனுக்காக முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.
விரிவு…

சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் விஜயகாந்த் தெரிவிப்பு!

திருச்செந்தூர்: சத்திரியராக இருப்பதை விட சாணக்கியராக இருங்கள் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வேட்பாளர் கோமதி கணேசனுக்காகப் பிரசாரம் செய்த விஜயகாந்த் பேசியதாவது;
விரிவு…

ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டார் கருணாநிதி – விஜயகாந்த்

இலங்கைத் தமிழர்களைமுதல்வர் கருணாநிதி காப்பாற்றத் தவறிவிட்டார் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் கோமதி ஆ.கணேசனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜய காந்த் நேற்று முன்தினம் மாலை 4.45 மணிக்கு ஆறுமுகநேரிக்கு வந்தார். அங்கு அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் ஆஸ்டின் தலைமையில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விரிவு…

ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறை‌ப்பே‌ன்: விஜயகாந்த்

‘ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைத்துக்காட்டுவேன்” என்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் கூறினார்.

திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போ‌ட்டி‌யிடு‌ம் வேட்பாள‌ர் கோமதி ஆ.கணேசனுக்கு தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் அடை‌க்கலாபுர‌த்‌தி‌ல் அ‌க்க‌ட்‌சி தலைவ‌‌ர் ‌விஜயகா‌ந்‌த் ஆதரவு திரட்டினா‌ர்.
விரிவு…

ஏன் இந்த தேர்தல் வந்தது – விஜயகாந்த் கேள்வி

திருச்செந்தூர் தொகுதியில் தே.மு.தி.க.,வேட்பாளர் கோமதி கணேசனை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது, “இந்த இடைத்தேர்தல் தற்போது அவசியம்தானா. ஏன் இந்த தேர்தல் வந்தது” என்று கேட்டார்.
விரிவு…

சட்டசபை இடைத்தேர்தல்: விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்

சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 12ம் தேதி முதல் 4 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

டிசம்பர் 19ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து திருச்செந்தூர் தொகுதியில் 12ம் தேதியும், 15ம் தேதி வந்தவாசியிலும் தனது அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.

ஆறுமுகநேரி, காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், திருச்செந்தூர், நாலுமுனைக்கிணறு, காயாமொழி, பூச்சிக்காடு, வள்ளிவிளை, சோனங்காட்டுவிளை, குரும்பூர் (பஜார்), சேதுக்குவாய்த்தான், வடக்கு ஆத்தூர், புன்னக்காயல், தெற்கு ஆத்தூர் ஆகிய ஊர்களில் 12 மற்றும் 13ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.

வந்தவாசி தொகுதியில் 15, 16ம் தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். தே.மு.தி.க வெளியிட்ட செய்தி்க்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்​சமே விபத்​து​க​ளுக்கு கார​ணம்: விஜ​ய​காந்த்

சென்னை: லஞ்​சம் வாங்​கிக் கொண்டு போக்​கு​வ​ரத்து விதி​மு​றைகளை அமல்படுத்தாமல், கண்​டு​கொள்​ளா​மல் இருப்​ப​து​தான் விபத்​து​க​ளுக்கு கார​ணம் என்று தேமு​திக தலை​வர் விஜ​ய​காந்த் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார்.
விரிவு…

ஊனமு‌ற்றோரு‌க்கு சலுகை‌யி‌ல்லை: த‌மிழக அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று

மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்த ஊனமு‌ற்றவ‌ர்க‌ளி‌ல் 80 பே‌ரி‌‌ல் நா‌ன்கு பேரு‌‌க்கு‌ம், உதவி கேட்டு வி‌ண்‌ண‌ப்‌பி‌த்த மனவ‌ள‌ர்‌ச்‌சி கு‌‌ன்‌றிய‌வர்க‌ளி‌ல் 4 ஆ‌யிர‌ம் பே‌‌‌ரி‌ல் 2 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு‌த்தா‌ன் ‌உத‌வி‌த்தொகை கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.
விரிவு…

தேமுதிக வேட்பாளர்கள்: திருச்செந்தூர்-கோமதி கணேசன், வந்தவாசி-ஜனார்தனன்

சென்னை: வரும் இடைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தேமுதிக சார்பில் கோமதி ஆ.கணேசனும், வந்தவாசியில் என்.ஜனார்தனனும் போட்டியிடுகின்றனர்.

இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜய்காந்த் இன்று வெளியிட்டார்.