சென்னை: “தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் தேவையற்றது என்று ராகுல் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து; என்னை பொறுத்தவரை இணைப்பு திட்டம் அத்தியாவசியமானது,” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளன்று, அரசு மருத்துவமனைகளில் பிறந்த பெண் குழந்தைகள் பெயரில் அக்கட்சி சார்பில் 10,000 ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தே.மு.தி.க., ஐந்தாம் ஆண்டு துவக்க நாளான நேற்று இத்திட்டத்தை, கோயம்பேடு கட்சித் தலைமை அலுவலகத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் இணைந்து விஜயகாந்த் துவங்கி வைத்தார்.இதன் முதல் கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 85 குழந்தைகளுக்கு இன்சூரன்ஸ் பத்திரத்தை அவர்கள் வழங்கினர்.
விரிவு…