விளம்பரங்கள்


செய்திகள்:

என்னிடம் மக்கள் கூட்டம் நிலைத்து நிற்கும்: விஜயகாந்த் பேச்சு

மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனை ஆதரித்து கட்சித்தலைவர் விஜயகாந்த் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:- தே.மு.தி.க. கொடி வைக்க விடாதீர்கள், போஸ்டர் ஒட்ட விடாதீர்கள் என்று தடுக்கிறார்கள்.
அதை எல்லாம் மீறிதான் தே.மு.தி.க. முன்னேறிக்கொண்டு இருக்கிறது. அவர்களை கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. மக்களை நேசிப்பவர்கள் தான் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள். நான் மக்களை நேசிக்கிறேன். அதனால்தான் கூட்டணி வைக்காமல் உங்களை நம்பி தனித்து போட்டியிடுகிறேன். இல்லை என்றால் நானும் கூட்டணி வைத்திருப்பேன்.
விரிவு…

மக்கள் இருக்கும் தைரியத்தில் தான் தி.மு.க., அ.தி.மு.க. 2 கட்சிகளை எதிர்த்து போராடுகிறேன் சென்னையில் விஜயகாந்த் பிரசாரம்

மக்கள் இருக்கும் தைரியத்தில் தான் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளையும் எதிர்த்து போராடுகிறேன் என்று விஜயகாந்த் கூறினார்.

மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனை ஆதரித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். இந்த கூட்டங்களில் அவர் பேசியதாவது:- விரிவு…

‘சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட், திராட்சை தோட்டம் யாருக்கு?’

சென்னை: ஜெயலலிதா தன்னை தன்னலம் கருதாதவர் என்று சொல்லிக் கொள்கிறார். தனக்கென்று குடும்பம் இல்லை என்று கூறுகிறார். அப்படியென்றால் சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் ஆகியவை எல்லாம் யாருக்கு? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
விரிவு…

கிலோ… ஹலோ… சலோ…தி.மு.க., மீது விஜயகாந்த் பாய்ச்சல்

சென்னை :”கிலோவும், ஹலோவும் ஒரு ரூபாய்க்குத் தருவதாக மார்தட்டுகின்றனர். அவர்களைத் தேர்தலில் சலோ.. சலோவென.. மக்கள் வீட்டிற்கு அனுப்பிவிடுவர்,” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
விரிவு…

ஏழ்மை இல்லாமல் மாற்றி காட்டுவேன் வடசென்னை தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம்

40 தொகுதிகளிலும் வெற்றி கொடுத்தால் தமிழகத்தில் ஏழ்மை இல்லாமல் மாற்றி காட்டுவேன் என்று விஜயகாந்த் பேசினார்.

விஜயகாந்த் பிரசாரம் விரிவு…

மத்திய சென்னையில் விஜயகாந்த் பிரசாரம்

சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளராக ராம்கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இன்று மாலை பிரசாரம் செய்ய உள்ளார்.

மத்தியிலும், மாநிலத்திலும் அரசு நிர்வாகம் கெட்டு விட்டது – விஜயகாந்த் பேச்சு.

மத்தியிலும் மாநிலத்திலும் அரசு நிர்வாகம் சீர்கெட்டு விட்டது என்று நடிகர் விஜயகாந்த் பேசினார்.

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.சுரேசை ஆதரித்து திருவேற்காடு பஸ் நிலையம் அருகே நடிகர் விஜயகாந்த் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

ரெயில் கடத்தல்

அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு அரசுகளும் மக்களை குழி தோண்டி புதைத்து இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் மணல் கடத்தல், ஆள் கடத்தல், விமானம் கடத்தல், அரிசி கடத்தல் போன்றவை தான் இருந்தன.

தற்போது ரெயில் கடத்தலும் ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் நிர்வாக சீர்கேட்டிற்கு உதாரணங்கள் ஆகும். இவர்களை நம்பி காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீர்கள்.

பஸ் கட்டணம் குறைப்பு

இன்றையில் இருந்து பஸ் கட்டணத்தை குறைத்திருக்கிறார்கள். ஆதாரத்துடன் நான் நிரூபிப்பேன். 21 ரூபாய் பஸ் கட்டணம் 8 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் அப்படியே இருந்தால் பரவாயில்லை.

ஆனால், தேர்தலுக்கு பிறகு கட்டணத்தை ஏற்றி விடுவார்கள். இலங்கையில் போர் நிறுத்தம் என்று கூறுகிறார்கள். ஆனால் நேற்று இலங்கை தமிழர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியென்றால் போர் நிறுத்தம் எங்கே?

உலக வர்த்தக மையம்

மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை; காரணம் தேர்தல் பிறகு மின்சார கட்டணத்தை ஏற்றி விடுவார்கள். திருமங்கலம் இடைத்தேர்தலில் அந்த தொகுதியில் மின்வெட்டு இல்லை. தேர்தல் முடிந்த பிறகு 4 மணி நேரம் மின்வெட்டு. அதேபோல தான் தேர்தல் வரை மின்வெட்டு இல்லை என்று கூறுவார்கள். தேர்தல் முடிந்த பின்னர் மின்வெட்டை ஏற்படுத்தி விடுவார்கள்.

தே.மு.தி.கவை 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்தால் என்னால் பஸ் கட்டணம், மின் கட்டணத்தை குறைக்க முடியும். நான் சொன்னேன், ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு உலக வர்த்தக மையம் அமைப்பேன் என்று, அப்படி அமைத்தால் வேலை இல்லா திண்டாட்டம் நீங்கி விடும். அதேபோல பெண்களுக்கு கலைக்கல்லூரி, அறிவியல் கல்லூரி தொடங்குவேன். லஞ்சத்தை ஒழிப்பேன்.

நல்லது செய்வேன்

சிலர் வறுமையை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு தங்களுடைய வறுமையை ஒழித்தார்களே தவிர பொதுமக்களின் வறுமையை ஒழிக்கவில்லை. நான் எனது சட்டமன்ற தொகுதியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம் திறந்து வைத்துள்ளேன். இதில் ஏராளமான பெண்கள் பயிற்சி முடித்து வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

40 தொகுதியிலும் தே.மு.தி.க ஜெயித்தால் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம் தொடங்கி வைப்பேன். நாங்கள் ஜெயித்தால் மக்களுக்கு நல்லது செய்வோம். எனது கூட்டணி மக்களோடும் தெய்வத்தோடும் தான். இக்கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் சுரேசுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்கும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு நடிகர் விஜயகாந்த் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட அவைத் தலைவர் வி.எல்.பாபு, மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விஜயகாந்த் காடுவெட்டி, பூந்தமல்லி ஆகிய ஊர்களில் பேசினார்.

திருவள்ளூர்

முன்னதாக திருவள்ளூர் கடைத்தெருவில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயகாந்த் பேசும் போது கூறியதாவது:-

தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி, ஆட்சி செய்து கோடி கோடியாக சம்பாதித்துள்ளார்கள். ஆனால் மக்கள் கஷ்டம் தீர்ந்தபாடில்லை. காரணம் மக்களை நேசிக்காத தலைவர்கள் இருப்பதால் இந்த நிலைமை ஏற்படுகிறது. நான் மக்களை நேசிக்கிறேன்.

மக்களை நேசித்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்து நல்லாட்சி செய்தார். எனக்கும் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் நானும் எம்.ஜி.ஆர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவேன்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் நடந்த பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. உளவுத்றையினர் தங்கள் வேலையை விட்டு விட்டு என்னை கண்காணிப்பதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். நான் பொதுக்கூட்டத்தில் பேசும் போது மின்தடை ஏற்படுத்துகின்றனர். தேர்தலுக்காக பஸ் கட்டணத்தை குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்த மறுநாளே பஸ் கட்டணத்தை அதிகரித்து விடுவார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘அம்மன் மீது சத்தியமாக மக்களுக்கு நல்லது செய்வேன்’! : பிரசாரத்தில் விஜயகாந்த் உத்தரவாதம்

சென்னை : ”ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ஒருவர் தி.மு.க., உறுப்பினர் அட்டை பெற்றுவிட்டால் அவருக்கு தேர்தல் முடிவதற்குள் 5,000 ரூபாய் வரை வருமானம் இருக்கிறது. ஊழல் செய்த பணத்தை மக்களுக்கு அவர்கள் கொடுப்பதால் நான் அதை தட்டி கேட்க மாட்டேன்.” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
விரிவு…

மின் கட்டணத்தை உயர்த்த திட்டம்?

சென்னை: பஸ்களில் திடீரென கட்டணத்தைக் குறைத்திருப்பதன் மூலம் இதுவரை மக்களை ஏமாற்றி, அதிக கட்டணம் வசூலித்து, கொள்ளையடித்திருப்பது அம்பலமாகிவிட்டது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். விரிவு…

சென்னையில் விஜயகாந்த் மூன்று நாட்கள் பிரசாரம்

தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வடமாவட்டங்களில் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், சென்னையில் மூன்று நாட்கள் முகாமிடுவதற்கு திட்டமிட்டுள்ளார். விரிவு…