விளம்பரங்கள்


செய்திகள்:

தேமுதிகவுடன் யாரும் நேரடியாக மோத முடியாது – விஜயகாந்த்

ஸ்ரீவைகுண்டம்: தேமுதிகவுடன் யாரும் நேரடியாக மோத முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தேமுதிக வேட்பாளராக சவுந்திரபாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.
விரிவு…

ஸ்ரீவைகுண்டத்தை பூலோக வைகுண்டம் ஆக்குவேன்: விஜயகாந்த்

தேமுதிகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியை பூலோக வைகுண்டமாக மாற்றுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் இன்று 2வது நாள் பிரசாரம் மேற்கொண்டார். ஏரலில் நடந்த பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு உள்ள குளங்களை தூர்வாரினாலே இந்த பகுதி செழிப்பானதாக மாறும். ஆனால் அந்த பணியை அரசு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குளங்கள் தூர்வாரப்படும். இதனால் விவசாயம் வளர்ச்சி பெறும்.
விரிவு…

எனக்கென தனி சேனல் இருந்தால் தான் கருணாநிதிக்கு உடனடி பதில் தரமுடியும் : தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் ஆவேசம்

ஆர்.எஸ்.மங்கலம் : “எனக்கென தனி சேனல் இருந்தால் தான் கருணாநிதிக்கு உடனடி பதில் தரமுடியும்’ என, இளையான்குடி தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார் . இளையான்குடி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணனை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் அவர் பேசியதாவது: எனது சிறுவயதில் நெல் கொள்முதலுக்காக எனது அப்பாவுடன் இப்பகுதிக்கு வந்துள்ளேன். அன்றிருந்த பசுமை இன்று வறட்சியாக மாறியுள்ளது.
விரிவு…

தொண்டர்கள் குவிந்தனர்

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று நடை பெறவிருக்கும் பிரம்மாண்டமான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளி லிருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் புதுக்கோட்டையில் குவிந்துள்ளனர்.
விரிவு…